Wednesday, April 4, 2012

நிலவின் விம்பம்



நிலவின் விம்பம் விழுந்ததில்
சிதைந்து போனது
குளத்தின் முகம்....!

சலனம்



வானம் அவிழ்த்த
மொட்டுக்கள்
மலர்ந்தன நிலத்தில்.....!

நிற வெறி


கருமேகங்கள் கண்ணீர் வடிக்கின்றனஇ
வானத்திலும் வந்துவிட்டதா
கறுப்பு வெள்ளை பாகுபாடு....!

மணிக்கூடு



தமக்குள் ஒற்றுமையில்லை
உலகுக்கு வழிகாட்டுகிறது
மணிக்கூடு....!

பனித்துளிகள்



மூச்சடக்கி மூழ்காமல்
முத்துக் குளித்தது இயற்கை
பனித்துளிகள்.....!

கௌரவம்



வாசலோடு நின்றுகொள்
பளிங்குத் தரையை
பாதங்கள் மிதிக்கட்டும்...!

பார்வை



திரையிட்டு மறைத்தேன்
தெளிவாகத் தெரிந்தது
பார்வை...!